Skip to main content

"மத்திய அரசே ஜி.எஸ்.டி. ரீபண்ட் தொகையை உடனே வழங்கு" -திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

மத்திய பா.ஜ.க. மோடி அரசு வந்த பிறகு ஜவுளித் தொழில் புரிபவர்களுக்கு ஜி.எஸ்.டி வரி என்கிற சுருக்குக் கயிறு அப்படியே நசுக்கி கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பொருளாதார இழப்பாலும் கடன் சுமையாலும் தவித்து வருகிறார்கள். பனியன் தொழில் என்கிற ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் தலைநகராக இருக்கிற திருப்பூரில் மிகப்பெரிய திண்டாட்டத்தை அங்கு வாழும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

 

GST issue-Communist MP Subarayan letter

 



ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படு அந்த உற்பத்தியில் தொடங்கி விற்பனை வரை பல்வேறு நிலைகளில் வரி வரி வரி என வரி மேல் வரி போடுகிறது மத்திய அரசு. இதில் கட்டிய வரிகளில் பல நிலைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அப்படி திருப்பி கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வரி ரீபண்ட் தொகை மட்டும் பல லட்சம் கோடி மத்திய அரசு வைத்துள்ளது.

 

GST issue-Communist MP Subarayan letter

 



இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. திருப்பூர் சுப்பராயன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் "பனியன் தொழிலுக்கு வரி விலக்கு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு மானியம் வழங்கக்கோரியும், திருப்பூரில் தொழிற் பூங்கா அமைக்க வலியுறுத்தியும், பனியன் மற்றும் ஆயத்த ஆடை துறையை சேர்ந்த ரிஸ்கி எக்ஸ்பெக்ட்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், பனியன் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தித்தரக்கோரியும்" வலியுறுத்தியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.