Skip to main content

‘கிராமசபை கூட்டங்களை அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்வது ஜனநாயக விரோதப் போக்கு’ - செந்தில் ஆறுமுகம்

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Grama saba meeting senthi aarumugam
                                                                          மாதிரி படம்


அக்டோபர் 2ஆம் தேதி நடக்கவேண்டிய கிராமசபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இதனை எதிர்க்கட்சியான திமுக கண்டித்து தடையை மீறி கிராமசபை கூட்டத்தை நடத்தியது.

 

கிராமசபை கூட்டத்தை இரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

 

“உள்ளாட்சி அமைப்புகளை ஊழல் செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்துவீர்களா?வன்மையாகக் கண்டிக்கிறோம்.. ரத்து செய்யப்பட்ட கிராமசபைகளை மீண்டும் நடத்த உத்தரவிடவேண்டும்.  (செப் 26) அன்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் கிராமசபைகள் நடத்த ஆணை பிறப்பிக்கிறார் (ந.க.எண்: 670/2020). அப்போது கரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், 5 நாள் இடைவெளியில், விடிந்தால் கிராமசபை நடக்கும்வேளையில் முந்தைய நாள் இரவில் (அக் 1) கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்வது ஏன்? 

 

5 நாளில் கரோனாவின் பரவல் பன்மடங்கு தமிழகத்தில் பெருகிவிட்டதா? தியேட்டர்களை திறக்குமளவுக்கு தளர்வுகள் வந்துவிட்ட பிறகு, கிராமசபை கூட்டங்களை ரத்து செய்வது அப்பட்டமான அரசியல்.  கிராமசபையில் பங்கேற்று உள்ளாட்சியை வலுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிராமங்களில் களம் இறங்கும் வேளையில், ஆளுங்கட்சியோ அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சியை அதலபாதாளத்தில் குழிதோண்டி புதைப்பதற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.   

 

இந்த ஜனநாயக விரோதப் போக்கை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாநில சுயாட்சிக்கு குரல்கொடுத்த அண்ணாவின் பெயரை தனது கட்சிப்பெயரில் வைத்திருக்கும் ஆளுங்கட்சியானது கிராம சுயாட்சிக்கு சமாதி கட்டுவது எந்தவகையில் நியாயம். தமிழக உள்ளாட்சி வரலாற்றில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத ‘வரலாற்று சாதனையாக’  கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு இன்னும் தேர்தலே நடத்தப்படவில்லை. கிராமப் பஞ்சாயத்துகளிலும் இன்னும் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. 

 

ஆகமொத்தம், உள்ளாட்சி அமைப்புகள் என்பது ‘ஊழல்’ செய்வதற்கு மட்டுமே உபயோகமாவது; கொள்ளையடிப்பதற்கு மட்டுமே அவசியமானது; அதில் கிராமசபை கூட்டங்கள் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன என்றபோக்கில் ஆளுங்கட்சி செயல்படுவது ஜனநாயக விரோதப் போக்கின் உச்சம்.  

 

கிராமப்பகுதிகளில் கரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில், கிராமசபை ரத்து செய்யப்பட்ட கிராமங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு உடனடி உத்தரவு வழங்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.