Skip to main content

''கிருமி யுத்தம் போதும்... கருவி யுத்தம் வேண்டாம்!" -தமிழ் பேரரசு கட்சி கௌதமன் வேண்டுகோள்

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
The germ war is enough ... don't wage the tool war! "-The Tamil Empire Party Gowdaman's Request

 

இந்திய-சீன நாடுகள் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட நிலையில், இரு தரப்பிலும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எல்லை பகுதிகளில் பதட்டம் அதிகரித்தபடி இருக்கிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள 'தமிழ் பேரரசு கட்சி'யின் பொதுச்செயலாளர் வ.கெளதமன், "இந்திய ஒன்றியத்தின் எல்லை பகுதியான லடாக்கில் சீனப் படைகள்  அரங்கேற்றிய தாக்குதலில் இந்திய படை அதிகாரி  உட்பட 20 வீரர்களுடன்  நம் தமிழ்நாட்டு தமிழரான இராணுவ வீரர் திரு.பழனி அவர்களும், உயிரிழந்த சம்பவத்தை கேட்டு ஆற்றமுடியா துயரத்தில் அமைதி இழந்து போனேன். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கரோனா நோய்த் தொற்றால் நிலைகுலைந்து போயிருக்கையில் சீன அரசு தேவையற்ற ஒரு சர்வதேச அரசியலை கையில் எடுத்திருக்கிறது.

இயற்கை தங்கள் மீது தொடுத்திருக்கும் பொருளாதார போரை சரிகட்ட இயலாமல் கையறு நிலையிலிருக்கும் பல நாடுகள் இனி இது போன்று மக்களை ஏமாற்றும் மடைமாற்ற செயல்களில் ஈடுபடக் கூடும். இதனை ஒருபோதும் மனிதகுலம்  ஏற்காது. உலக நாடுகள் அனைத்தோடும் ஒன்றிணைந்து கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியை அழிக்க போர் வியூகம் எடுப்பதை விட்டுவிட்டு, சீனாவும், இந்தியாவும் இப்படி தேவையற்ற மோதல்கள் நடத்துவதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

மனிதர்களான நாம் யாராக இருந்தாலும், கரோனா நோய்தொற்றால் சந்தேகிக்கப்பட்டு 15 நாட்கள் தனிமைபடுத்தினாலே மனமுடைந்து போகிறோம். இந்நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எல்லை பகுதி யுத்தத்தினால் மரணம் அடைந்திருப்பது அறமற்ற பெரும் கொடுமை. எண்ணற்ற வீரர்கள், மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் பிரிந்து எல்லை தெய்வங்களைப்போல் தம்மக்களை காக்க உயிராயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த தன்னலமற்ற  வீரரான திரு.பழநி என்கிற ஒரு மகத்தான போர் வீரரை நாம் இழந்து நிற்கிறோம். இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற வேண்டிய நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்காக நிரந்தர ஓய்வை மேற்கொண்ட திரு.பழநியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலுடன் எமது கண்ணீரையும் காணிக்கையாக்குகிறோம்.

திரு.பழநியின் இரண்டு பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகோலுவதுடன் அன்னாரின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய, தமிழக அரசுகள் செய்து தர வேண்டும் " என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.