Skip to main content

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி மகளுடன் திமுக பிரமுகர் உடல் கருகி பலி!

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
Kodaikanal




கொடைக்கானல் கீழ்மலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து மனைவி மகளுடன் திமுக பிரமுகர் உடல் கருகி பலியானார். 
 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ள மங்கலம் கொம்பை சேர்ந்தவர் கணேசன். திமுக பிரமுகரான இவர், கடந்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு மனைவி மஞ்சுளாதேவியும் மகள் விஷ்ணுபிரியாவும் உள்ளனர்.


 

Kodaikanal




கொடைக்கானல் மலைப்பகுதி என்பதால் கணேசன் தனது மகளை திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி தனியார் பள்ளியில் தங்கவைத்து படிக்கவைத்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் விஷ்ணுபிரியா ஊருக்கு வந்தார். இவர்களது வீடு மலைப்பகுதியில் உள்ளது. எனவே காட்டு யானைக்கு  பயந்து வீட்டை தகர கொட்டையால் மேயப்பட்டு அதை சுற்றிலும் மரப்பலகையால் அடைக்கப்பட்டிருந்தனர்.


 

வெள்ளிக்கிழமை இரவு கணேசன் தனது குடும்பத்தாருடன் அந்த வீட்டில் அயர்ந்து தூங்கினார். சனிக்கிழமை அதிகாலையில் கணேசனின் மனைவி மஞ்சுளாதேவி வழக்கம் போல் காப்பி போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது சிலிண்டரில் உள்ள கேஸ் லீக்காகி இருந்ததை கவனிக்காத மஞ்சுளாதேவி நெருப்பை பற்ற வைத்தார்.

 

Kodaikanal



 

அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி வீடு முழுவதும் தீ பரவியது. வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அலறித் துடித்தனர். திடீரென்று கணேசனின் வீட்டில் புகையும் அலறல் சத்தம் வருவதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றியுள்ளனர். நெருப்பை அணைத்து அதன்பின் வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது, கணேசன் அவரது மனைவி மஞ்சுளா தேவி மகள் விஷ்ணு பிரியா ஆகியோர் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி பலியானார்கள்.


 

இச்சம்பவம் அப்பகுதியில் பரவியதால் ஏராளமான மலை கிராம மக்கள் குவிய தொடங்கினார்கள். இந்த விஷயம் தாண்டிகுடி போலீசாருக்கு தெரிந்ததின் பேரில் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் கொடைக்கானல் கீழ் மலை, மேல்மலை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.