Skip to main content

முதலையிடம் சிக்கி உயிர்பலியை தடுக்க வனத்துறையினர் துண்டுபிரசுரம்

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Foresters leaflet to prevent crocodile trapped

 

சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தையொட்டி ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் ஆற்றின் ஓரமாக மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழித்துவிட்டு கை கால்களைக் கழுவும் போதும் வயல்வெளிகளில் வேலை முடிந்து மாலை நேரத்தில் ஆற்றில் குளிக்க முற்படும்போது ஆற்றிலுள்ள முதலைகள் அவர்களைக் கடித்து இழுத்துச் சென்று கொன்று விடுகிறது.

 

இது போன்ற சம்பவம் இந்தப் பகுதியில் நடந்து பல பேர் முதலைக்கு உயிர்ப் பலி ஆகியுள்ளனர். மேலும் முதலை கடிக்கு ஆளாகி கை கால்களை இழந்தவர்கள் பலர் இன்னும் இந்த பகுதியில் வசிக்கிறார்கள். கடந்த வாரத்திற்கு முன்பு கூட பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாலை நேரத்தில் ஆற்றில் குளிக்கும் போது முதலை இழுத்துச் சென்று கடித்ததால் உயிர் பலியானார். இது போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் முதலை ஆற்றில் உள்ளது என்றும் யாரும் ஆற்றில் குளிக்கவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சில இடங்களில் ஆற்றின் கரைகளில் முதலைகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் இரும்பு கம்பிக் கூண்டு அமைத்து பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

 

Foresters leaflet to prevent crocodile trapped

 

இதனையும் மீறி சில இடங்களில் பொதுமக்கள் அவசரநிலையில் கை கால்களைக் கழுவவும், ஆற்றில் குளிக்கவும் செல்லும் போது முதலையிடம் மாட்டி உயிர்ப் பலியாவதைத் தடுக்கும் விதமாக வியாழக்கிழமையன்று கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசுயா, சரளா உள்ளிட்ட வனத்துறையினர் பழைய கொள்ளிடம் ஆற்றையொட்டியுள்ள பழையநல்லூர், அகரநல்லூர், வேளக்குடி ஆகிய கிராமங்களில்  பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை உள்ளது பொதுமக்கள் எக்காரணம் கொண்டு ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, கை கால்கள் கழுவவோ இறங்கக்கூடாது என்றும் மீறி இறங்கினால் முதலை கடிக்கு ஆளாகி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் முதலை குறித்த துண்டுப் பிரசுரத்தை அப்பகுதியில் உள்ள கிராம பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.