Skip to main content

பள்ளியை சூழ்ந்த வெள்ளம்! விழிபிதுங்கும் அதிகாரிகள்!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
skol


வயல்வெளியில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளியில் தண்ணீர் சூழ்ந்ததால் மாணவர்கள் செல்லமுடியாத சூழலுக்கு ஆளாகினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள கொள்ளிடக்கரையோர கிராமம் சித்தமல்லி, அங்குள்ள அக்ராகரத்தில் இயங்கிவந்த நடுநிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடத்தை 1 கோடியே 62 லட்சத்தில் ஒரு விளைநிலத்தில் கட்டி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
 

skol


கொள்ளிடத்தில் இருந்து பிரியும் தெற்கு ராஜன் வாய்க்கால் தண்ணீரை சித்தமல்லி வாய்க்காலுக்கு திருப்பிவிட்டனர். அந்த வாய்க்கால பல ஆண்டுகளாக தூர்வாராமல் தூர்ந்து கிடந்தால் பள்ளி அருகே உடைப்பு ஏற்பட்டு பள்ளிக்கட்டிடத்தை சூழ்ந்து கடல்போல காட்சியளித்தது.

பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் முழங்கால் அளவு நனைந்துகொண்டே சென்றனர் தண்ணீர் வந்ததுக்கே இப்படி என்றால் வரும் காலத்தில் வரும் பெரும் மழையில் என்ன செய்யப்போகிறதோ என்கிற அச்சம் பொதுமக்களிடமும், பள்ளி மாணவ, மாணவிகளிடமும் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்குள்ள குளத்தை தூர்வாரி பள்ளியை சுற்றியும் நிறப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
 

skol


’’பள்ளிகளையும், கோயில்களையும் மேடான பகுதியில் கட்டினார்கள் நம் முன்னோர்கள், வெள்ளகாலங்களில் அது நிவாரன முகாமாக இருந்தது, ஆனால் ஆதயத்தை மட்டுமே குறிக்கோலாக கொண்ட இன்றைய அரசியல்வாதிகள் வயக்காட்டில் கட்டி முழ்கடிக்கின்றனர். கொள்ளிடக்கரையோரம் என்பதால் மழைகாலத்தில் அங்குள்ள மக்கள் எங்கு போவார்கள் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் சிந்தித்து தூர்வாரவேண்டும் என்கிறார் அங்குள்ள இளைஞர் வசந்த்.

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.