Skip to main content

சென்னையில் பயங்கர தீ விபத்து! 

Published on 24/10/2022 | Edited on 24/10/2022

 

  fire accident in Chennai!

 

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் மற்றும் அதனையொட்டியுள்ள மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.

 

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் மற்றும் அதனையொட்டியுள்ள மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

இந்த மருந்து கிடங்கு கடந்த ஒரு வருடமாக செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் அனுப்பட்டுவருகின்றது. இங்கு காலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

தீபாவளி பண்டிகையின் காரணமாக பணியாளர்கள் விடுப்பில் இருப்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், மருந்து கிடங்கில் இருந்து அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் இரண்டு சரக்கு ஆட்டோக்கள் எரிந்துள்ளன. மேலும், தீவிபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினரும் போலீஸாரும் ஆய்வு செய்து விசாரித்துவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்