Skip to main content

காலக்கெடுவுக்குள் வருமானவரி செலுத்த தவறினால் அபராதம்!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

 

it

 

 

 

வருமானவரிதுறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 2018 மற்றும் 19 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

மேலும் ஜூலை 31 பிறகு வருமானவரி செலுத்தபட்டால் வரி தொகையுடன் அரபரத கட்டணமும் சேர்த்து  வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியில் வருமானவரி கணக்கு செலுத்தப்படவில்லை என்றால் 5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் கொண்டவராக இருந்தால் 1000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

 

எனவே குறிப்பிட்ட தேதியில் வருமானவரியை செலுத்தி அபராதத்தை தவிர்க்கும்படி வருமானவரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வருமானவரி தொகையை சென்னையிலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்