Skip to main content

போக்சோ வழக்கில் சாட்சி கூறியவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் மகன்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

 father and son who attacked witness in pocso case at trichy 

 

போக்சோ வழக்கு ஒன்றில் சாட்சி கூறியவரை தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தளூர் கள்ளத்தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55). இவர் விவசாயத் தொழிலாளி ஆவார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் மணிகண்டன் (வயது 28) என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் செல்வதற்கு சாட்சியாக பரமசிவம் இருந்துள்ளார். இதனால் பரமசிவன் மீது செல்லையாவும் அவரது மகன் மணிகண்டனும் மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்று காந்தளூர் பகுதியில் உள்ள திட்டக்குளத்தில் மீன் வாங்குவதற்காக பரமசிவம் சென்றபொழுது, அங்கு வந்த செல்லையாவும் அவரது மகன் மணிகண்டனும் பரமசிவத்திடம் தகராறு செய்ததுடன், பரமசிவத்தின் கழுத்து மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக பரமசிவத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையா மற்றும் மணிகண்டன்  ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்