Skip to main content

விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைக் கைவிட வலியுறுத்தி கடலூரில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

farmers signature movement union government

 

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் சி.ஐ.டி.யு அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள், மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் ரவீந்திரன், வெங்கடேசன், இளங்கீரன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விருத்தகிரி, பசுமைவளவன், கண்ணன், ராமச்சந்திரன், கலியபெருமாள்,  தென்னரசு, ஜெய குரு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். 

 

farmers signature movement union government

 

கூட்டத்தில் மின்சார வரைவு திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் 'ஒரு கோடி கையெழுத்து' இயக்கத்தில் பங்கேற்பது, கடலூர் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது,  ஜூலை 27- ஆம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகளின் எதிர்ப்பைப் பதிவு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

 

அதையடுத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடலூர் படைவீரர் மாளிகை அருகில் தொடங்கப்பட்டது. கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து விவசாய சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைக் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.