Skip to main content

'தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி'!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

tn govt export companies reopening tn govt gazette notification

 

தமிழகத்தில் 8 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

 

அதன்படி, தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம். அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்