Skip to main content

முன்னாள் அமைச்சர் தலைமையில் கருப்புப்பட்டை அணிந்து போராட்டம்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

admk

 

திருச்சி மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  'திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாமலும், பெட்ரோல், டீசல் விலையானது 10 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் இதுவரை விலை குறைப்பை செய்யாமல் இருப்பதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தயாராகும் கர்நாடகாவிற்கு எதிராக கருப்புப்பட்டை அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்