Skip to main content

''எல்லோருக்கும் எல்லாம்...''- சாலையோர கடைகளை ஊக்குவித்த அமைச்சர் சக்கரபாணி

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

"Everything for everyone..."- Minister Chakrapani who promoted roadside shops

 

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டின் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி செயல்படும் சாலையோர உணவகங்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று 'எல்லோருக்கும் எல்லாம்' உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்திராக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்ட சாலையோர உணவகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் சக்கரபாணி கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டனர்.

 

அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''தென்னிந்திய வர்த்தகம் உணவு சார்பாக நடைபெறுகின்ற 'எல்லோருக்கும் எல்லாம்' சாலையோர பாதுகாப்பு சட்டப்படி நடத்தப்படும் உணவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்தவர்களை வரவேற்கிறேன். ஐக்கிய நாடுகளில் சாலைகளின் சார்பாக 1779 முதல் ஆண்டுதோறும் உணவுத் திருவிழா அக்டோபர் 16 ஆம் தேதி உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக 150 நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாமும் ஒருநாள் முந்தியே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

 

"Everything for everyone..."- Minister Chakrapani who promoted roadside shops

 

குறிப்பாக இந்த ஆண்டு சிறந்த உற்பத்தி, சிறந்த சத்துணவு, சிறந்த சூழல், சிறந்த வாழ்வு என்பதை நோக்கி செயல்பட வேண்டும் என ஐ.நா.உணவு மற்றும் மேலாண்மை வலியுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் நமது முதல்வர் வழிகாட்டுதல்படி இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி இருக்கிறோம். சாலையோர கடை உரிமையாளர்களை வரவழைத்து அவர்களை சிறப்பு செய்வது இதுவே முதல்தடவை என நினைக்கிறேன். தமிழக மக்களுக்கு தங்கு தடையின்றி அனைவருக்கும் உணவுப் பொருள் வழங்குவதற்கும் சத்துணவு உணவு கிடைப்பதற்கும் அரசு பாடுபட்டு வருகிறது. அதேபோல் பசியின்றி, நோயின்றி எல்லோரும் வாழும் வகையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க முதல்வர் பாடுபட்டு வருகிறார்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.