Skip to main content

காலிப் பரிசுப் பெட்டி:கலையும் தலைகள்!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

ஜெ.வின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்சபட்ச குழப்பம் காரணமாக, அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து டி.டி.வி தினகரன் உருவாக்கியது தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அ.ம.மு.க. சசிகலா, ஜெ.வுடனிருந்ததால் அவர் சார்ந்த தேவர் சமூகத்தினர் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் முக்கியமானார்கள். நேரம். சசிகலா சிறைவாசம் போக தினகரன் அ.ம.மு.க. ஆரம்பித்ததால் சமூகம் காரணமாக அவர் பக்கம் ஆதரவாகத் திரண்டனர் தேவர் சமூகத்தவர்கள். குறிப்பாக தினகரன் தென்மாவட்டம்  வருகிறபோது அவர் சார்ந்த சமூகத்தினர் திரண்டு வந்து வரவேற்றது அ.ம.மு.க. விற்கு நல்லதொரு மாஸை ஏற்படுத்தியதற்கு மற்றதொரு காரணமும் பேசப்பட்டது.

 

 Empty gift box

 

அ.தி.மு.க.வின் எக்ஸ்.எம்.எல்.ஏ.க்களான ஆர்.பி.ஆதித்தன், அண்ணாமலை, இசக்கிசுப்பையா, மைக்கேல் ராயப்பன் இவர்களோடு அ.தி.மு.க.வின் பொறுப்பாளர்களான பாப்புலர் முத்தையா கல்லூர் வேலாயுதம் பாளை பகுதி செ.க்களான அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் அ.தி.மு.க.வினர்  பெரிய லெவலில் சாய்ந்தது தான். அது, அ.ம.மு.க.வின் பலம் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தியதால் முக்கிய கட்சிகளுக்கு சவாலாகவுமிருந்தது. 

 

 Empty gift box!

 

அ.ம.மு.க.வில் அமைப்பு ரீதியாக கிளைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக தென்மண்டல அமைப்பாளரானார் அ.தி.மு.க.வின் மாஜி முக்கிய புள்ளியான மாணிக்கராஜா. தேர்தல் நெருங்க பிற சமூகத்தின் ஆதரவாளர்களும் இணைந்தனர். இதனால் எம்.எல்.ஏ, எம்.பி. கனவு காரணமாக பலர் தங்களின் சொந்தப் பணத்தைக் கட்சி வளர்ச்சிக்காக காலி செய்தனர்.

 Empty gift box!

 

 Empty gift box!

 

நடந்து முடிந்த தேர்தலில் மக்களவைக்கு 37 தொகுதிக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் என களத்தில் நின்றும் ஒருவர் கூடத் தேறவில்லை. பல இடங்களில் டெப்பாசிட்டும் பறிபோனது.

 

 Empty gift box!

 

எதிர்பார்ப்புகள் நடக்காத சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்பு அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளிகளான அண்ணாமலை, ஆர்.பி.ஆதித்தன் போன்றவர்கள் அ.தி.மு.க.விற்கு நடையைக்கட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து அதிருப்தி காரணமாக நேற்று முன்தினம் அ.ம.மு.க.வின் மா.செ. பாப்புலர் முத்தையா, நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், அசன் ஜாபர் அலி, எம்.சி.ராஜன் மற்றும் பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இது, கட்சி மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த தி.மு.க பக்கமும் சாயும் முடிவிலுமிருக்கிறார்களாம்.

 

 Empty gift box!


 

 Empty gift box!

 

தினகரனை தொண்டர்கள், பொறுப்பாளர்கள் நெருங்கிவிடாதபடி தடையாய் நிற்கிறார் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா. அது தான் எங்களின் விலகலுக்குக் காரணம் என்கிறார்கள் மாறியவர்கள். இதனிடையே அ.ம.மு.க.வின் முக்கியப் புள்ளியான இசக்கி சுப்பையா தன்னுடைய குற்றாலம் ரிசார்ட்டில் நேற்றும், முன்தினமும் தனது ஆதரவாளர்கள் முன்னூறு பேர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் இதில் கலந்து கொண்ட சிலர்.

 



ஆனாலும் அ.ம.மு.க.வில் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.