Skip to main content

தேர்தல் வாக்குறுதி கருத்துக் கேட்புக் கூட்டம்... திமுக வெளியிடப்போகும் இரண்டு விதத் தேர்தல் வாக்குறுதிகள்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

Election Promise Poll Meeting ... Two election promises to be released by DMK!

 

2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. தி.மு.க தலைமையும் தேர்தல் பணிகளை தொடங்கி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குப் பயிற்சி வழங்கிவருகிறது. அதேநேரத்தில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது. இதில், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் உள்ளனர்.

இவர்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களைச் சந்தித்து தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியது என்னன்ன, தங்களது மாவட்டத்தில், தொகுதியில், நகரத்தில், கிராமத்தின் தேவையென்ன என்பது குறித்துக் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.

அதன்படி, அந்தக் குழு நவம்பர் 18ஆம் தேதி மாலை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தந்தது. இந்தக் குழுவை திருவண்ணாமலை தெற்கு மா.செவும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தலைமையிலான தி.மு.க நிர்வாகிகள் வரவேற்றனர். திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் சங்கங்கள், இளைஞர்கள் சங்கம், பொதுநல அமைப்புகள், வியாபார வர்த்தகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் என்னன்ன என்பது குறித்த கடிதத்தை அக்குழுவிடம் தந்தனர்.

 

Election Promise Poll Meeting ... Two election promises to be released by DMK!


அதேபோல் ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகள் தங்கள் பகுதி முக்கியப் பிரமுகர்களிடம், தேர்தல் வாக்குறுதியாக என்ன வேண்டும் என விவாதித்து அது தொடர்பான அறிக்கையை வழங்கினர். இவைகளைப் பெற்றுக்கொண்ட இந்த குழு தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் இதை வழங்குகிறோம். இதில் பொதுமக்களுக்கு, சமூகத்துக்கு தேவையான வாக்குறுதிகளாக இருப்பவை தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். அதனை தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார், குழு உறுப்பினரும், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா எம்.பி.
 

cnc

 

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் வாக்குறுதி அறிக்கை, இரண்டாக வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுமைக்குமான ஒன்று, அதில், நீட் தேர்வு ரத்து, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண்மை சட்டங்கள் ரத்து, ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை போன்றவை தமிழகம் முழுமைக்கானதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேவைகள் குறித்து மற்றொரு அறிக்கை என இரண்டாக வெளியிடவுள்ளதாக தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த 2016, சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுமைக்குமான தேர்தல் வாக்குறுதி, மாவட்டங்கள் தோறும், தனித்தனி தேர்தல் வாக்குறுதி என இரண்டு தேர்தல் அறிக்கைகளை தி.மு.க வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.