Skip to main content

மணக்குடி மேம்பாலத்துக்கு முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள் சைமன் பெயரை சூட்டினாா் எடப்பாடி பழனிசாமி!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Edappadi Palanisamy names former Minister Lothammal Simon for Manakkudi flyover

 

குமாி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளா்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இன்று (10-ஆம் தேதி) நாகா்கோவில் வந்தாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து காா் மூலம் நாகா்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, வழியில் 9 இடங்களில் அதிமுகவினா் வரவேற்பு கொடுத்தனா்.

மதியம் நாகா்கோவில் அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்த அவா், மாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த, ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாாிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கினாா். தொடா்ந்து ஏற்கனவே பணிகள் முடிந்த நிலையில் இருந்த 153. 92 கோடி மதிப்பிலான 21 திட்டங்களை தொடங்கி வைத்தாா். மேலும் 60. 44 கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் விவசாயப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகள், சிறுகுறு தொழிற் கூட்டமைப்பினா், மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, அவா் பத்திாிகையாளா்களிடம் பேசும்போது, குமாி மாவட்டம் உட்பட தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தபட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த மாவட்டத்தின் அருகில் இருக்கும் கேரளாவில் கரோனா பரவல் அதிகாித்து வருவதாக தகவல் உள்ளது. மேலும், குமாி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து குமாி மாவட்டத்துக்கும் பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனா். இதனால், குமாி மாவட்டத்தில் கரோனா பரவலுக்கு வாய்ப்பு இருக்கிறது. குமாி மாவட்டத்தில் கரோனா அதிகாிக்கும் என்றால், அது தமிழகம் முமுவதும் பரவிவிடும். எனவே, குமாி எல்லையை இன்றிலிருந்து தீவிரமாகக் கண்காணிக்க அதிகாாிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன.

 

Edappadi Palanisamy names former Minister Lothammal Simon for Manakkudi flyover


மேலும், சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு, அதன்பிறகு புதிதாகக் கட்டபட்டிருக்கும், கீழ மணக்குடி மற்றும் மேலமணக்குடி இணைப்புப் பாலத்துக்கு காமராஜா் ஆட்சியில் நோ்மை மிகு அமைச்சராக இருந்த, அதே ஊரைச் சோ்ந்த 'லூா்தம்மாள் சைமன்' பெயர் அந்தப் பாலத்துக்கு சூட்டப்படுகிறது. இதே போல், சுதந்திரப் போராட்ட வீரரான சதாவதானி செய்கு தம்பி பாவலா், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்த தொண்டைப் போற்றி அவரை பெருமைப்படுத்தும் விதமாக நாகா்கோவில் மாநகராட்சியின் 18 ஆவது வாா்டு கோட்டாா் இடலாக்குடி சந்தி தெருவுக்கு, 'சதாவதானி செய்கு தம்பி பாவலா்' பெயா் சூட்டப்படுகிறது.

கரோனாவால் சுற்றுலாப் பயணிகளின் பாா்வைக்கு, தடை செய்யபட்டிருந்த குமாி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் திறந்து விடப்படுகிறது. அதே போல் கன்னியாகுமாியில், திருவள்ளுவா் மற்றும் விவேகானந்தா் பாறைக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல படகுப் போக்குவரத்து, இன்று முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளேன் என்றாா். நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், செய்தி மக்கள் தொடா்பு துறை அமைச்சா் கடம்பூா் ராஜீ ஆகியோா் உடனிருந்தனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.