Skip to main content

டி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், அதே பகுதியின் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் இருவரும் குடும்ப வழியில் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இருவருமே அடிப்படையில் தலைமைக் காவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்று தற்போது பணியிலிருப்பவர்கள்.

செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரகுராஜன், நேற்று காலை காவல்துறை அலுவலக பொது குறிப்பேட்டில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார் தனது குடும்ப பகை காரணமாக தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக எழுதி வைத்து விட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அந்த அலுவலக குறிப்பேட்டில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் எழுதியிருப்பதாவது. கன்னியாகுமரி மாவட்டம், பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சுரேஷ்குமார். அவர் எனது மாமியருக்கு நெருங்கிய சித்தப்பா மகன் ஆவார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வரும் நிலையில், அந்த பகையுணர்வில் என்னை பல வழிகளில், நேரிலும் தொலைபேசி மூலமும் தகாத வார்த்தைகளால் மனம் வருந்தும்படி பேசி வருகிறார். இருப்பினும் நான் பொறுமையோடு நடந்துள்ளேன். இது என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் நன்கு தெரியும்.

 

 DSP VS Inspector - Familyon the Road

 

கருங்குளம் பகுதியில் கேமரா பொருத்துவதற்கும், ஆதிச்சநல்லூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கும் ஆட்களை பிடித்து தருமாறு கேட்டு வருகிறார். அதனால் ஸ்பான்சர் தேடி அலைய வேண்டியுள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்கிறேன். இவ்வாறு காவல் துறையின் பொது நாட்குறிப்பில் ரெகுராஜன் பதிவு செய்துள்ளார்.

நேற்று காலை வாக்கி டாக்கியில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. அழைப்பின் பேரில் மணக்கரைக்கு இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் சென்றாராம். இதனை நாட்குறிப்பில் அவர் பதிவு செய்யாமல் அவசரமாக சென்றுள்ளார்.

அப்போது காவல் நிலையத்திற்கு வந்த டி.எஸ்.பி். சுரேஷ்குமார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை என எழுதி வைத்து விட்டு மீண்டும் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டிருக்கிறார். ரெகுராஜன், தான் தூதுகுழி தாண்டி மணக்கரை செல்வதாக கூறினாராம். அது சமயம் டி.எஸ்.பி. கடுமையான வார்த்தைகளால் அவதூறாக பேசினாராம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனை செல்கிறேன் என காவல் துறையின் அலுவலக பொது குறிப்பேட்டில் குறிப்பு எழுதி வைத்து விட்டு இன்பெக்டர் ரெகுராஜன் சென்றுள்ளார்.

காவல்துறை மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இது குறித்து துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள் மாவட்டக் காவல் துறை அதிகாரிகள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.