Skip to main content

பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோபத்தை காட்டாதீங்க: சி.பி.ராதாகிருஷ்ணன்!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
 
cb


தமிழகத்தில் தீவிரவாதம் உள்ளதாக கூறும் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோபத்தை காட்டாதீங்க என கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷின் ஐந்தாண்டு நினைவு நாள் அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

அதிமுக, பாஜகவும் வேறு வேறு அரசியல் என்றாலும் அவ்வப்போது ஒத்த கருத்தும் ஏற்படலாம், மாற்று கருத்தும் ஏற்படமலாமே தவிர இணக்கமான கட்சிகள் என எடுத்துக்கொள்ள கூடாது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது ஒரு சடங்கு. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியினர் மீது ஜனநாயக முறைப்படி கொண்டு வரும் இந்த தீர்மானம் தோல்வியை தழுவும்.

நல்லவர்கள் இத்தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்கள். அதிமுக ஆதரிக்கவில்லை என்றால் மகிழ்ச்சி. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரவாதம் உள்ளது எனத்தெரிவித்தால் தமிழக அமைச்சர் கோபம் கொள்ளாமல், புலன் விசாரணை நடத்தி தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்