Skip to main content

தற்கொலை செய்த எஸ்.ஐ சடலம் 2 நாள் போராட்டத்துக்கு பின்பு உடல் அடக்கம்! சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு  

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விபல்குமார்(36). வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். புதுச்சேரி காவல்துறையில் 2011-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர் நெட்டபாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

 

SI's body buried after 2 days of struggle CBCIT inquiry ordered


இந்நிலையில் கடந்த சில தினங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர் 21-ஆம் தேதி காலை மீண்டும் பணியில் சேர்ந்தார். அன்று காலை பணியில் இருந்தபோது திடீரென காவல்நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு கட்டிடத்திற்கு சென்ற அவர் பகல் 12 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல் கட்ட விசாரணையில் பணியின்போது உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக விபல்குமார் தனது டைரியில் தனது கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 

SI's body buried after 2 days of struggle CBCIT inquiry ordered


இதனிடையே விபல்குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது. அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய போலீசார் 22-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது விபல்குமார் உடலை எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட விபல்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அரசு வேளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலையுறுத்தி அவரது தந்தை பாலு, தாய் விஜயா மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவ கல்லுாரி முன் நேற்று முன் நாள் வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி, கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினரும் போரட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சீனியர் எஸ்.பி ராகுல் அகர்வால், சப்- கலெக்டர் சுதாகர், எஸ்.பிக்கள் ரங்கநாதன், ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் போராட்டக்குழுவினர் ஏற்க மறுத்து இரண்டு நாட்களாக சடலத்தை வாங்க மறுத்து போராடினர். இதனிடையே காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் கொடுத்த டார்ச்சர் காரணமாகவே விபல்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனவும், இன்ஸ்பெக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விபல்குமார் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும் விபல்குமார் தற்கொலை குறித்து சி.பி.ஐ விசாரிக்க வலியுறுத்தி அவரது தந்தை பாலு, கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வனிகுமார், டி.ஜி.பி மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு அனுப்பினார்.

 

SI's body buried after 2 days of struggle CBCIT inquiry ordered


அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, “சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் மரணம்  தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.யை அவரது குடும்பத்தினரை சந்தித்து நேர்மையான விசாரணை நடத்த  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், விபல்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்  என்றும் கூறினார்.

அதேசமயம் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் காரைக்கால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து விபல்குமாரின் சடலம் இன்று அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு புதுச்சேரி டி.எஸ்.பி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.