Skip to main content

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிக நிர்வாகிகள்;விரட்டி விரட்டி கைது செய்த போலிஸ்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் களத்தில் நிற்கிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசி, ஐ.ஜே.கே, கொங்கு கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி தனது கூட்டணி இறுதியாகிவிட்டது என அறிவித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதியதமிழகம், புதியநீதிக்கட்சி என சில கட்சிகளோடு கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.

 

திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும், விஜயகாந்த் தின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தன. அந்த கட்சி யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடனே கூட்டணி எனச்சொல்லி வந்தது. இதனால் இழுப்பறி இருந்துவந்தது. இந்தநிலையில் தான் 4 தினங்களுக்கு முன்பு எங்கள் கூட்டணி இறுதியாகிவிட்டது என அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

DMMK MEMBERS ARREST IN VELLORE

இதனால் தேமுதிகவின் நிலை தாழ்ந்தது. திமுக அறிவிக்கும்வரை தேமுதிகவுக்கு 6 சீட் என சொல்லி வந்த அதிமுக, திமுக கூட்டணி கதவை சாத்தியதும், தேமுதிகவுக்கு வேறுவழியில்லையென 3 சீட்டாக குறைத்தது. இதனால் தேமுதிக தலைமையான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் அதிர்ச்சியாகினர்.

 

இந்நிலையில் மார்ச் 6ந்தேதி சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை சேர்ந்தவரும், பிரதமருமான மோடி வந்துயிருந்தார். அன்று விஜயகாந்த் மோடியுடன் மேடையேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் நிகழ்ச்சிக்காக மேடையில் வைக்கப்பட்ட பேனரில் விஜயகாந்த் படம் பொறிக்கப்பட்டது.

 

அதே நாளில், திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செல்போனில் பேசி, உங்களுடன் கூட்டணிக்கு வருகிறோம், அதுப்பற்றி எங்கள் கட்சி நிர்வாகிகள் சேலம் இளங்கோவன், அனகை முருகேசன் உங்களை வந்து சந்திப்பார்கள் எனச்சொன்னார். அதன்படி அவர்கள் துரைமுருகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

 

அதே நேரத்தில் சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை, சுதிஷ் சந்தித்து சீட் பேரம் நடத்தினார்.

 

தங்களை வைத்து தேமுதிக சீட் பேரம் நடத்துகிறது என்பது உணர்ந்த துரைமுருகன், தேமுதிக எங்களுடன் கூட்டணிக்கு வர துடிக்கிறது என்பதை போட்டு உடைத்தார். இதனால் தேமுதிக தலைமை அதிர்ச்சியானது.

 

தேமுதிகவின் செயலால் அதிர்ச்சியான பாஜக, அதிமுக போன்றவை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மோடியின் பிரச்சார மேடையில் வைக்கப்பட்டுயிருந்த பேனரில் இருந்து விஜயகாந்த் படத்தை அவசரம் அவசரமாக எடுத்துவிட்டனர். மோடி வந்து சென்றபின், பாஜகவினர், பிரேமலதா, சுதிஷ்சை கடுமையாக பேசியுள்ளனர்.

 

இதனால் மார்ச் 7ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த சுதிஷ், இளங்கோவன், அனகைமுருகேசன், தனிப்பட்ட விவகாரங்களுக்காக துரைமுருகனை சந்தித்தோம் என்றார்கள். துரைமுருகன், தனது கட்சி தலைமை குறித்து என்னவெல்லாம் என்னிம் பேசினார் தெரியும்மா?, அதை வெளியில் சொன்னால் அவருக்கு தான் அசிங்கம் என்றார். சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப, சந்திப்பை அவசரம்மாக முடித்துக்கொண்டு கிளம்பினார்.

 

திமுக, தங்கள் பேர அரசியலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி, தங்களை அம்பலப்படுத்தியதை பிரேமலதா, சுதிஷ்சால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வேலூரில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம், துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துங்கள் என்றனர்.

 

DMMK MEMBERS ARREST IN VELLORE

 

அதன்படி மார்ச் 8ந்தேதி காலை 10 மணியளவில் வேலூர் காட்பாடி, காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டை தேமுதிக நிர்வாகிகள் 20 பேர் கட்சி கொடியுடன் சென்று முற்றுகையிட முயன்றனர். அனுமதி பெறாமல் ஒருவரின் இல்லத்தை எப்படி முற்றுகையிடலாம் என காட்பாடி போலிஸார், தேமுதிகவினரை விரட்டியடித்தனர். அவர்கள் போகாமல் துரைமுருகன் ஒழிக, ஒழிக என கோஷமிட்டனர். அவர்களை முன்னேற விடாமல் போலிஸ் தடுத்ததால் வேலூர் – சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் கோபமான போலிஸார், காலை நேரத்தில் மறியல் ஈடுப்பட்டதால் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் பயந்துப்போன தேமுதிகவினர் சிலர் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால், அவர்களை விடாமல் போலிஸார் துரத்தி, துரத்தி கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

 

இதில் ஒரு கூத்து என்னவென்றால், துரைமுருகன் வீட்டை முற்றுகையிடப்போகிறோம் வாருங்கள் என தொண்டர்களுக்கு போன் செய்து அழைக்க, யாரும் வராததால் நொந்துப்போய் தாங்களே சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.