Skip to main content

ரெய்டு மூலம் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது! - துரைமுருகன்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

jkl


தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலுவின் கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களிலும், அதேபோல் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், "ஆளும் அதிமுக தோல்வி பயத்தில் பாஜகவின் துணையோடு திமுகவினர் வீடுகளில் ரெய்டு நடத்துகிறார்கள். இது இவர்களின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது" என்றார். 


 

சார்ந்த செய்திகள்