வரும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓபிஎஸ்-இன் மனு மீதான உத்தரவு வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களை முழுமையாக கேட்டபிறகு தீர்ப்பு நாளை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் சூரியமூர்த்தி என்பவர் பொதுக்குழுவை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த மற்றொரு வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுக்குழுவைத் தடைசெய்ய வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மனுதாரர் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரியிருந்த நிலையில், வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.