Skip to main content

மான் வேட்டைக்கு வந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Deer issue forest officers fined

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வடக்கு சரக பகுதியில் வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஏரிமலை காப்புக்காடு பகுதியில் வலையுடன் சுற்றிக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த மாது (53) என்பதும், மான் வேட்டைக்காக வனத்திற்குள் நுழைந்து இருப்பதும் தெரிய வந்தது.

 

இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்தனர். வனத்திற்குள் தடையை மீறி நுழைந்ததாக அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்