Skip to main content

கடலூர்: என்.எல்.சியில் மீண்டும் பாய்லர் வெடித்து விபத்து! 

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

CUDDALORE DISTRICT NEYVELI PLANT BOILER INCIDENT

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5- ஆவது அலகின் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிய ஒருவர் பலியானதாகவும்,13 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், 5 பேரை தேடும் பணி  தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியையும், தீயை அணைக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர். விபத்தில் தீ காயமடைந்தவர்களை மீட்டு என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

 

CUDDALORE DISTRICT NEYVELI PLANT BOILER INCIDENT

 

கடந்த ஏப்ரல் மாதம் 08- ஆம் தேதி இதே இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 6- ஆவது அலகின் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் 5- ஆவது அலகில் விபத்து நிகழ்ந்துள்ளது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்