Skip to main content

விபத்தில் இறந்த மனைவி மற்றும் படுகாயமடைந்த கணவருக்கு 1.44 கோடி இழப்பீடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

Cuddalore court orders Rs 1.44 crore compensation for wife and husband injured in accident
மாதிரி படம்

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரிய பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி நிறைமதி(48). ரவிக்குமார் என்.எல்.சியில் மேலாளராகவும், அவரது மனைவி நிறைமதி அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 11.6.2014 அன்று காரில் அரியலூரில் இருந்து சென்னைக்கு இருவரும் சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே சென்றபோது கார், பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நிறைமதி உயிரிழந்தார். ரவிக்குமார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார். இந்த விபத்து தொடர்பாக ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் கடலூர் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

 

இவர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள் சிவமணி,  சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

 

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி இருதயராணி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், விபத்தில் இறந்த என்.எல்.சி அதிகாரி நிறைமதி குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ரூபாய் 98,05,336 ரூபாய் நஷ்ட ஈடாகவும், தொகையை நீதிமன்றத்தில் வைப்பு செய்யும் வரை அதற்கான வட்டி 7.5% சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டார். 

 

இதேபோல் விபத்தில் படுகாயமடைந்த என்.எல்.சி. இணை மேலாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மற்றொரு மனு மீது நடைபெற்ற விசாரணையில், 'படுகாயமடைந்த ரவிக்குமாருக்கு ரூபாய் 46,39,380  நஷ்ட ஈடாக வழங்கவும்,  நீதிமன்றத்தில் தொகையை  வைப்பீடு செய்யும் வரை 7.5 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு வழக்குகளிலும் உயிரிழந்த மனைவிக்கும், காயமடைந்த கணவனுக்கும் சேர்த்து 1.44 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கடலூர் நீதிமன்றம் அதிரடி  உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.