Skip to main content

கோடிக்கணக்கில் சிக்கிய தங்கம்... புலனாய்வு அதிகாரிகள் விசாரணை!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

crores value Gold trapped... Investigators investigate

 

துபாயிலிருந்து நேற்று (28.09.2021) மாலை 5 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. இதில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கொண்டுவந்த 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 1.92 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த மாரிமுத்து வினோத், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இப்ராஹிம் சாகுல் ஆகிய இருவரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்