Skip to main content

மதுரை மாநகராட்சி மருந்து கொள்முதலில் முறைகேடு: சேலம் மாநகர அலுவலர் உட்பட 6 பேர் மீது வழக்கு!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

 

corruption in purchasing medicines for madurai corporation, case file against 6 including salem official

 

மதுரை மாநகராட்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து மருந்துகள் கொள்முதல் செய்ததாக சேலம் மாநகர் நல அலுவலர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாநகராட்சியில் மாநகர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் பார்த்திபன். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

 

கடந்த 16ஆம் தேதி இவருடைய வீட்டில் சேலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, "கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மதுரை மாநகராட்சியில் சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் சுகாதாரப்பிரிவு வரவு செலவுகளை ஆய்வு செய்துள்ளார். 

 

அதில், 6 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து முழு விசாரணை நடத்தும்படி மாவட்ட ஆட்சியரிடம் ஹக்கீம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் அந்தப் புகார் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு வந்தது.

 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடத்திய விசாரணயில், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து மருந்துகள் கொள்முதல் செய்ததில் 88 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. 

 

இது தொடர்பாக, அப்போது மாநகராட்சியில் பணியாற்றி வந்த மாநகர் நல அலுவலர் சதீஷ்குமார், இப்போதைய சேலம் மாநகர் நல அலுவலரும், அப்போதைய மதுரை உதவி மாநகர் நல அலுவலருமான பார்த்திபன், கண்காணிப்பாளர் மாலினி, உதவியாளர் குணசேகரன், கணினி உதவியாளர் அப்துல் கரீம், அலுவலக ஊழியர் ராமமூர்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

கடந்த 16ஆம் தேதி பார்த்திபன் வீட்டில் சோதனை நடத்தியபோது இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.” இவ்வாறு லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.