Skip to main content

கன்னியாகுமரியில் மேலும் 167 பேருக்கு கரோனா... பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியது!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
ety

 

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கரோனா வேகம் அதிரடியாக இருந்து வருகின்றது. குமரியில் இன்று மட்டும் 167 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,601 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் ஒருவர் இறந்த நிலையில், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்