Skip to main content

காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை - கே.எஸ்.அழகிரி

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

gh

 

காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாகப் பார்க்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியில் நேற்று வரை இருந்து வந்த நடிகை குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் இன்று பாஜகவில் இணைவதாக தகவல் வெளியான நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், "நானே அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறேன், என்னை காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் கட்சிக்குள் வளரவிடாமல் கட்டுப்படுத்தப் பார்த்தார்கள்" என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி, "காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாகப் பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்