Skip to main content

கோவை மாணவி விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் விசாரணை முடிந்தது!  

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Coimbatore student affair; School principal Mira Jackson's investigation is over!

 

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் நேற்று (14.11.2021) இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.

 

அதைத் தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு, அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், முதற்கட்ட விசாரணையை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்வதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் மூன்று குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் பள்ளி முதல்வரை தேடிவந்தனர். இந்நிலையில், பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்” என்றார்.

 

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Ammonia gas leak in factory Public damage

கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து இந்த ஆலை செயல்படாத முடியாத சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் இந்த ஆலையை வேறு ஒருவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் புதிய உரிமையாளர் பல மாதங்காளாக செயல்படாமல் இருந்த ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளார். அப்போது தொழிற்சாலையில் இருந்த சிலிண்டரில் இருந்து எதிர்பாராதவிதமாக அமோனியா வாயு கசிந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வாயு கசிவு சம்பவத்தால் ஆலையைச் சுற்றியுள்ளா 2 கி.மீ. தொலைவிற்கு வசிக்கும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சணை போன்ற பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நிலைமை முழுமையாக சீரான பிறகு இன்று (30.04.2024) சுகாத்தாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர். தொழிற்சாலையில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது