Published on 16/04/2020 | Edited on 16/04/2020
கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பல்வேறு துறைசார்ந்த உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பின் அமலுக்கு வரும் தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.