Skip to main content

தலையில் தையல்போடும் துப்புரவுத் தொழிலாளி; திருவாரூர் அரசுமருத்துவமனையின் அவலம்!!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிக மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக வரும் பொதுமக்களை மருத்துவர்கள் அலைகழிப்பதும், துப்புரவு தொழிலாளர்களை மருத்துவம் பார்க்க சொல்லுவதும், வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி விபத்துக்குள்ளான பெண் ஒருவருக்கு தையல் போடும் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

hh

தமிழ்நாடு சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாக பெருமை பேசிவருகிறார் அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர்.ஆனால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், போதிய டாக்டர்கள் நர்சுகள்  இல்லை என்றும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் மருத்துவ வசதி பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையே இருக்கிறது.

இந்தநிலையில் 1.3.2019 மன்னார்குடி அடுத்துள்ள உள்ளிக்கோட்டை மருத்துவமனைக்கு வந்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் 1,800 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இனி தமிழகத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்காது, சிறப்பான மருத்துவம் வழங்கப்படும். மக்கள் அவதிப்பட மாட்டார்கள். என கலர் கலராக ரிகல் விட்டார். ஆனால் அவர்கூறியது முழுக்க முழுக்க பொய் என்பதை நிறுபித்திருக்கிறது  கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள சம்பவம். 

கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை நம்பி சுமார் 18 கிராமங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நகராட்சி மருத்துவமனையாக இருந்து தற்போது தாலுக்கா மருத்துவமனையாக உயர்வு பெற்றுள்ளது. ஒன்பது டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் ஒன்பது மணிக்கு வந்து பன்னிரண்டு மணிக்குள் சொந்த மருத்துவமனைக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு காயத்தோடு ஒரு பெண் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அங்கு டாக்டர்கள் இல்லை. பணியில் இருந்த  நர்ஸீம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெண் துப்புரவு பணியாளரை சைகையில் காட்டி அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து துப்புரவு பணியாளர் காயம் அடைந்த பெண்ணை படுக்க வைத்து தலையில் காயம்பட்ட இடத்தில் தையல் போட்டு மருந்து போடுகிறார். எம்.எஸ் படித்த டாக்டர் போல துப்புரவு பணியாளர் தையல் போட்ட அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து எதுவும் கொடுக்காததால், தையல் போட்ட சமயத்தில் வலியால் துடிதுடித்து போனார். ஆனாலும் துப்புரவு பணியாளர் அசரவில்லை. துணிந்து கோணிப்பையை தைப்பது போல தைத்து முடித்து அந்த இடத்தில் மருந்து போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.