Skip to main content

தானே பிரசவம் பார்த்து குழந்தையை புதரில் வீசிய தாய்... போலீசார் விசாரணை!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

child in the bush ... Police investigation!

 

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தாய் பெற்ற குழந்தையை புதரில் வீசி சென்ற சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆண்டவர் கோவில் மான்பூண்டி ஆற்றின் அருகே புதரில் இருந்து குழந்தை கத்தும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்க்கையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததைக் கண்டு அதிர்ந்த மக்கள், குழந்தையை மீட்டு சென்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அக்குழந்தையின் தாய் அருகிலிருந்த கோவில் வளாகத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இனாம்ரெட்டிப்பட்டி சேர்ந்த அந்தப் பெண் கணவனை இழந்த நிலையில் வேறு ஒரு நபருடன் முறையற்ற தொடர்பில் கரு உண்டானதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் புதர் மறைவில் தனக்குதானே பிரசவம் பார்த்து புதரில் குழந்தை வீசிவிட்டு கோயில் வளாகத்தில் படுத்து இருந்தது தெரியவந்தது. தற்போது மீட்கப்பட்ட தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்