Skip to main content

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

CORONAVIRUS PREVENTION CHIEF SECRETARY DISCUSSION WITH DISTRICT COLLECTORS

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமலில் உள்ள நிலையில், வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாளை (22/05/2021) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

 

இதில், கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? முழு ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாமா? கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.

 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (21/05/2021) நண்பகல் 12.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆலோசனை நடத்துகிறார். இதில் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  

 

இந்த ஆலோசனையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, சேலம், திருச்சி, மதுரை, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
PM Modi's conversation with online sportspersons

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் டெல்லியில் நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் (வீரர்கள்) பிரதமர் மோடி இன்று (13.04.2024) கலந்துரையாடினார். இந்தியாவில் கேமிங் துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்கில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் 7 ஆன்லைன் கேமர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “கேமிங் துறையைச் சேர்ந்த இளைஞர்களுடன் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்க விரும்புவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.