Skip to main content

ராஜா முத்தையா மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் 245 பெட் தயார்... மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுபாட்டில் இருந்த ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையை, தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டதொடரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து அங்கு கரோனா தொற்றுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


  cdm


இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரையும் இங்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 26 பேரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தற்போது 18 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதி 8 பேர் மட்டுமே சிறப்பு வார்டில் உள்ளனர்.
 

 nakkheeran app



இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகம் கூறுகையில், தற்போது அரசு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் வார்டுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. 7 வென்டிலேட்டர் ஒதுக்கீடு செய்து தற்போது 2 வந்துள்ளது. இதனை அவசர சிகிச்சை மற்றும் வார்டு பகுதியில் வைத்துள்ளோம், விரைவில் 5 வரவுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் தொற்று சம்பந்தமாக எடுக்கப்படும் ஆய்வு முடிவுகள் விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, முடிவுகள் வருவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆனது, இதனால் சிரமம் இருந்து வந்தது.

 

uu

இதனைதொடர்ந்து இந்த மருத்துவமனையிலே ஆய்வு மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அனுமதியுடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ 32.63 லட்சம் பெற்று தொற்று கண்டறியும் கருவி வாங்கப்பட்டது. அதில் தற்போது கடலூர் மாவட்டம் முழுவதும் எடுக்கப்படும் சேம்பில் கொண்டு முடிவுகளை துல்லியமாக அறிவித்து வருகிறோம். கடந்த மூன்று நாட்களாக பாசிட்டிவ் கேஸ் இல்லை.

மேலும் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் 196 பேர், பி.ஜி. மருத்துவர்கள் 245, சி.ஆர்.ஐ. மருத்துவர்கள் 325 பேர், நர்சுகள் 275 பேர், கடைநிலை ஊழியர்கள் 140 பேர் உள்ளிட்ட 1800 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் முழுகவச உடை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 6 நாட்கள் வேலை பார்த்தால் இருவாரம் ஓய்வுக்கு பின்னர் அவர்களை கரோனா தொற்று சோதனை செய்து மீண்டும் பணிக்கு அனுமதிக்கப்படுகிறது.

கரோனா  தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலையில், முதலில் கபசுரக் குடிநீர், பின்னர் இட்லி சாம்பார். மதியம் தக்காளி, எலுமிச்சை சாதம், முட்டை, மாலையில் சுண்டல், இரவு சப்பாத்தி குருமா, ரவா கிச்சடி உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், அசித்ரோமைசின், சிங்க் வகை மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில் தற்போது கரோனா தொற்றுக்காக 245 பெட் தயார் நிலையில் உள்ளது. திடீர் என்று அதிக தொற்று வந்தால் சமாளிப்பதற்காக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊழியர்களையும் ஓய்வில் தனிமை படுத்தி வைத்துள்ளோம்.

நோய் தொற்று பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து அச்சத்தின் காரணமாக வருபவர்களை தனிமைப்படுத்த தனித்தனியாக பல்கலைக்கழக பொறியியல் துறையில் உள்ள கட்டிடத்தில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு வார்டுகளை கண்காணிக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் 32 கண்காணிப்பு கேமராக்களை அரசு நிறுவியுள்ளது. இதனால் என் அறையில் இருந்தே கரோனா தொற்று நோயாளிகள் உள்ள வார்டில் என்ன நடக்கிறது. என்று கண்காணிக்க முடிகிறது.

அங்கு நோயாளிகள் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமல் இருந்தால் முக கவசம் போடுவதற்கு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கரோனா தொற்று நோயாளிகள் வெளியே செல்லாமலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்களுக்கு யாருக்கும் இந்த தொற்று வரமால் இருக்க அதிகளவில் வெளியில் வரவேண்டாம். தற்போதுள்ள நிலைமாற்றப்பட்டால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறினார். இவருடன் குழந்தைகள் நல மருத்துத்துறை தலைவர் மருத்துவர் ராமநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடன் இருந்தனர்.     


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.