Skip to main content

நோய் எதிர்ப்பு சக்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன யோசனை!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

CHENNAI RAYAPURAM MINISTER JAYAKUMAR PRESS MEET


சென்னை ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்ததார் அமைச்சர் ஜெயக்குமார்.
 


அதில், "ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. தனிமைப்படுத்துவோர் வெளியே சென்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா அதிகமுள்ள பகுதியில் ஒருவர் இரண்டு முறை தடுப்பைத் தாண்டி வெளியே சென்றால் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஐந்து நாள் சீரணகுடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், ஜீரகம், மஞ்சள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்த்துக் காய்ச்சி வடிக்கட்டி பருகலாம்" என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்