Skip to main content

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் (படங்கள்)

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

சென்னை மற்றும் புறநகர் கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் அருகே, "விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெரும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கியது போல பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைந்து எளிமைப்படுத்த வேண்டும். பென்ஷன் தொகையை ரூபாய் 3000 ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இயற்கை மற்றும் விபத்து மரணங்களுக்கான நிதியினை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்" என்று கட்டுமானத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்