Skip to main content

விருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!- ஒரு பள்ளி மாணவன் விடுவிப்பு!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Chargesheet filed in Virudhunagar case! - A school student released!

 

விருதுநகர் இளம்பெண் கூட்டுப்  பாலியல் வன்கொடுமை  வழக்கில்,  இன்று (23-ஆம்  தேதி) 7 பேர் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி மாணவன் ஒருவன் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளான்.

 

இவ்வழக்கில் ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேரும்,  மாணவர்கள் 4 பேரும்,  கடந்த மார்ச் 21- ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தபடி, இன்று (23-ஆம் தேதி) 806 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஹரிஹரன், பிரவீன், ஜுனத் அகமது, மாடசாமி ஆகிய 4 பேர் மீதும், விருதுநகர் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றத்தில் அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தால், ஒரு மாணவரை மட்டும்  விடுவித்து,  இவ்வழக்கின் விசாரணை அதிகாரி சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்