Skip to main content

கனரா வங்கியிடம் 6 கோடி ஏமாற்றிய திருச்சி தொழில் அதிபர் மீது சி.பி.ஐ. வழக்கு! 

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

 

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னுடைய சொந்த நிறுவனத்துக்கு 6 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்ததாக பெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் உட்பட இருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

ச்

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஹைடெக் என்ற நிறுவனம் பெல் நிறுவனத்திற்கு தன்னுடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறி போலியான ஆவணங்களை தயார் செய்து, அதனை பன்படுத்தி துவாக்குடியில் உள்ள கனரா வங்கியில் சுமார் 6 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து பெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் ஹைடெக் நிறுவனத்தின் பங்குதாரருமான மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி மரகதம் மீது மதுரை மண்டல கனரா வங்கியின் மேலாளர் பரமசிவம் புகார் அளித்தார்.

 

அதனை தொடர்ந்து போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காக இருவர் மீதும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு பிரபல தொழிலதிபர் நாட்டை விட்டு ஓட்டம்...

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

businessman flees from country after defruding banks

 

கனரா வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிகளில் ரூ. 350 கோடிக்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார் 'பஞ்சாப் பாஸ்மதி ரைஸ்' லிமிடெட் நிறுவன இயக்குநரான மஞ்ஜித் சிங் மக்னி.

 

பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மஞ்சித் சிங் மக்னி, அவரது மகன் குல்விந்தர் சிங் மக்னி, அவரது மருமகள் ஜஸ்மீத் கவுர் மற்றும் சில அரசு ஊழியர்கள் ஆகியோர் இணைந்து ஆறு வங்கிகளிலும் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கனரா வங்கியின் ரூ .517 கோடி, ஆந்திர வங்கியின் ரூ .53 கோடி, யுபிஐ -யில் ரூ .44  கோடி, ஓ.பி.சி.-யில் ரூ .25 கோடி, ஐ.டி.பி.ஐ. -யில் ரூ .14 கோடி மற்றும் யூகோ வங்கியில் ரூ .41 கோடி என்கிற அளவில் இவர்கள் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாகக் கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது.

 

இந்த மோசடி குறித்து 2019 மார்ச் 11 அன்று இந்திய ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டபோது, 2019 மார்ச் 30க்குள் சி.பி.ஐ.-க்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ.-இல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய , வங்கி 15 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடன்பெற்று மோசடி செய்த மஞ்ஜித் சிங் மக்னி 2018 ஆம் ஆண்டே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும். இப்போது அவர் கனடாவில் வசிக்கலாம் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

"ஓய்வு பெற்றும் நிம்மதி இல்லை"... முன்னாள் ஊழியர்களின் போராட்டம்....

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

பணியில் இருக்கும் வரை காலம் போவதே தெரிவதில்லை. ஆனால் ஒய்வு பெற்ற பிறகு ...? முறையாக கிடைக்க வேண்டிய உதவிகள், பண பலன்களை கேட்டு நடையாய் நடப்பது மட்டுமல்ல போராட்டத்திலும் ஈடுபட வேண்டியிருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்.

 

canara bank ex employees rally at erode

 

 

ஈரோடு மாவட்டத்தில்  ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்  சங்கத்தின் சார்பில் இன்று  ஈரோடு கனரா வங்கி பிரதான கிளை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்க சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கனரா வங்கி ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் உதவி தலைவர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்றோருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், 2002ம்ஆண்டு முன்னர் ஒய்வு பெற்ற அனைவருக்கும் 100 சதவீத பஞ்சப்படி வழங்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் ஓய்வு பெற்றோர் நலனுக்காக தனியான ஊழியர் நலத்தொகை ஒதுக்கப்பட வேண்டும், ஓய்வூதியோர் குறைகளை தீர்க்க ஒரு உயர்மட்ட தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், அதே போல்  வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு மற்றும் மருத்துவமனை கட்டணத்தை வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற  பலரும் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்றும் நிம்மதியில்லாமல் போராட வேண்டியிருக்கிறது.