Skip to main content

தொழிலதிபர் கடத்தல் -  5 மணி நேரத்தில் மீட்ட போலிசார்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
jamal

  

 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜமால் முகமது (50). இவரை இன்று காலை 5 மணிக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்லும் போது மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக அவரது மகன் முகமது யாசர் கோட்டைப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 


    புகார் பற்றி எஸ்.பி. செல்வராஜ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சோதனைகள் தொடங்கியது. இந்த நிலையில் கடத்தல்காரர்கள்  சென்ற கார்கள், பயன்படுத்திய செல் எண்களை வைத்து அவர்கள் வடகாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருகாக்குறிச்சி கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன் படி ஆலங்குடி டி.எஸ்.பி. முத்தலிபு தலைமையிலான வடகாடு போலிசார் மற்றும் ஆலங்குடி போலிசார் கருக்காக்குறிச்சி கிராமத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தென்னந்தோப்பில் கார்கள் நிற்பது தெரிந்தது. அங்கு போலிசார் செல்லும் போது அங்குள்ள ஒரு கொட்டகையில் ஜமால் முகமதுவை விட்டுவிட்டு அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் மறைந்துவிட்டனர். ஜமால் முகமதுவை மீட்ட போலிசார் அறந்தாங்கி டி.எஸ்.பி. தெட்சிணாமூர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டு கடத்தல்காரர்களை கரும்பும் தோட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


    அப்போது ஒவ்வொரு நபராக 6 பேர் பிடிபட்டனர். கோட்டாக்குடி முத்துக்குமார், கோபி கூடல் நகர் மதுரை, ஐயப்பன் மணக்காடு பேராவூரணி, மணிவாசகம் கருக்காக்குறிச்சி, முத்துவேல் கருக்காக்குறிச்சி, ஹரிகரன் சிலைமான் மதுரை ஆகிய 6 பேரையும் கைது செய்த போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். 
    இதில் முதல்கட்ட விசாரனையில் முத்துக்குமார் கூறும் போது.. நானும் ஜமால் முகமதுவும் மீன் வாங்கி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக ஒன்றாகவே தொழில் செய்து வந்தோம். புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகள் வாங்கியுள்ளோம். ஆனால் அனைத்து ஆவணங்களும் ஜமால் முகமதுவிடமே இருந்தது. 


    இந்த நிலையில் இருவரும் பிரிந்து தொழில் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டதால் என் பங்கை பிரித்து கொடுக்கும்படி கேட்டேன். கொடுக்கவில்லை. சொத்துக்களையாவது  கொடு என்று கேட்டேன் தரவில்லை. அவசரமாக பணம் தேவைப்பட்டதால் ரூ. 25 லட்சம் கேட்டேன். இப்படி எங்களுக்குள் பல பிரச்சனைகள் உருவானதால் பங்குத் தொகையை பெறவே கூலிப்படையை வைத்து கடத்தினேன். என்ப பங்கை பிரித்து கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று முதல்கட்ட விசாரணையில் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து விசாரனை நடந்து கொண்டிருக்கிறது.


    தொழிலதிபர் கடத்தப்பட்ட 5 மணி நேரத்தில் எந்த பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டதால் போலிசாரை பொதுமக்களும் ஜமால் முகமது உறவினர்களும் பாராட்டினார்கள். இதே போல கடந்த மாதம் நித்தியானந்தாவின் பக்தர் கடத்தப்பட்டும் உடனடியாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.