Skip to main content

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம்! அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

 

Bribe to offer gold to Thali! Two women arrested

 

கடலூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தெய்வநாயகி. இவர் கடலூர் முதுநகரை சேர்ந்த ஹவுஸ் அகமது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் லஞ்சம்  வாங்கிய போது  லஞ்ச ஒழிப்பு போலீசார் தெய்வநாயகியை கைது செய்தனர். 

 

இதேபோல் முட்லூரை சேர்ந்த ஷேக் அமீது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சமாக பெற்ற பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பானுமதி கைது செய்யப்பட்டார்.

 

அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்