Skip to main content

நடுக்கடலில் காசிமேடு மீனவர்களின் படகு தீப்பிடிப்பு!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Boat fire by Kasimedu fishermen in the Mediterranean

 

காசிமேடு மீனவர்களின் படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பட்டினத்தில் நடுக்கடலில் மீன்பிடித்த சென்னை காசிமேடு மீனவர்களின் படகு திடீரென தீப்பிடித்தது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேர் கடலில் குதித்து தத்தளித்த நிலையில், தற்போது மீனவர்களைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து இந்தியக் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மீனவர்களின் படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்