Skip to main content

போலீஸை வழி நடத்திய பாஜக முருகன்..! – ஓடி ஓடி பணி செய்த அதிகாரிகள்

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

BJP tamilnadu leader murugan arrest in thiruvannamalai for vel yatra

 

 

திருவண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் முருகன் நடத்திய வேல் யாத்திரையின் பாதுகாப்புக்காக சுமார் 1,000 போலீஸார் நகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5 மணிக்கு முருகன் மேடையேறி வெற்றிவேல், வீரவேல் என முழங்கி தொண்டர்கள் முன் பேசத்துவங்கினார். அவர் பேசி முடிக்கும்போது, மேடையில் ஏறிய டி.எஸ்.பி, இரண்டு இன்ஸ்பெக்டர்கள், சார் வேன் நிறுத்தியிருக்கோம் வந்து ஏறிக்குங்க என்றனர். எங்க கட்சியின் மாநில நிர்வாகிகளை அந்த வேனில் ஏத்திக்குங்க, பின்னாடி நான் வந்து ஏறிக்கறேன் எனச்சொல்ல அதன்படி ஏற்றினர். மேடையில் இருந்து முருகனை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு மடம் ஒன்றில் கொண்டு சென்று அமரவைத்தனர். அவரோடு 500க்கும் அதிகமான கட்சியினர் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டனர். 

 

இரவு 6.45 மணியளவில் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார் முருகன். தொண்டர்கள் வரிசையாக வந்து அவரை சந்தித்தனர். அந்த இடத்தில் தொண்டர்கள் யாரும் முகத்தில் மாஸ்க் அணியவில்லை. அதோடு தனிமனித இடைவெளி சுத்தமாக கடைப்பிடிக்கவில்லை. நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்த முருகன், நான் கிளம்பறேன் என காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சொன்னார். இன்ஸ்பெக்டர் ஒருவர் வேகவேமாக வெளியே சென்று முருகன் காரை கொண்டு வந்து அந்த மடத்தின் வாசலில் நிறுத்தச்சொன்னார், கார் வந்து நின்றதும், உங்க கார் ரெடியா இருக்கு சார் என பவ்யமாக வந்து சொன்னார். முருகன் மடத்திற்குள் இருந்து வெளியே வந்தவர், காரில் ஏறி தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

 

BJP tamilnadu leader murugan arrest in thiruvannamalai for vel yatra

 

காவல்துறையின் மேலிடத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட அதிகாரிகளுக்கு வந்த உத்தரவே, பாஜக தலைவர் முருகனை மரியாதையோடு நடத்துங்கள், கைது செய்யும்போதும் அவர் மீது போலீஸ் கை வைக்கக்கூடாது. அவரை நெருக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளனர். அவர் பேசி முடித்ததும் அவரை கைது செய்யுங்கள். கைது செய்து தங்கவைக்கும் இடத்தில் அவர் விருப்பப்படி நடந்துக்கொள்ள விடுங்கள் என உத்தரவு வந்துள்ளது. இதனால்தான் முருகன் முன், மிக பவ்யமாகவே அதிகாரிகள் நடந்துகொண்டனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

படங்கள்: விவேகானந்தன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.