கர்நாடகாவை போல் தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது. இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க சார்பில் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. தி.மு.க சார்பில் அக்கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். பா.ஜ.க சார்பிலும் அமித்ஷா சில ஆலோசனைகளை தமிழகம் வந்தபோது நடத்தினார். அ.தி.மு.க பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய நிலையில், பா.ஜ.க தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. இந்நிலையில், தமிழகத் தேர்தல் தொடர்பாகப் பேசிய தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க விரைவில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.