Skip to main content

'பாஜக-அதிமுக கொள்கை ரீதியாக பிரியவில்லை'-இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முகமது அபூபக்கர் பேட்டி

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'BJP-AIADMK not divided politically'-Muhammad Abubakar of Indian Union Muslim League interviewed


அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கும் இடையே நடந்த அறிக்கை போர் காரணமாக பிரிந்துள்ளார்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு சமய நல்லிணக்க விழாவாக முஸ்லிம் லீக் சார்பாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், அனைத்து சமூகங்களில் கலாசார தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் முப்பெரும் கொள்கையாக கடந்த 25 ஆண்டுகளாக அறிவிப்பு செய்து நடத்தி வருகிறோம்.

 

தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. கட்சி அமைப்பு தேர்தல் தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களாக பிரித்து, நிர்வாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் அகில இந்திய கவுன்சில் புதுதில்லியில் நடைபெறஉள்ளது. நாங்கள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். அதனுடைய ஒருங்கிணைப்பு குழுவில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உறுப்பினராக உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். தொடர்ந்து தேர்தல்களம் கண்டு வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களையும், 9 மண்டலங்களாக பிரித்து நவம்பர் மாதத்தில் பயிலரங்கள் நடத்தவுள்ளோம். திமுகவோடு கொள்கை ரீதியான கூட்டணி வைத்துள்ளோம். தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், கலாதார தனித்தன்மையை பாதுகாப்பது உள்ளிட்ட கொள்கையாகும். தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் மாறக்கூடிய சூழல் உள்ளது. அண்மையில் அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.

 

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை. அப்போது பல நேரங்களில் சட்டப்பேரவையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரினேன். அதற்கு அப்போதைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பிரச்சனை விடுதலை செய்ய முடியாது என கூறினார். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த விடுதலை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்கள். அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அவர்களுக்குள் அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கு இடையே நடத்த அறிக்கைப் போர் காரணமாக பிரிந்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது மத்தியில் குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்தது அதிமுக. பாஜக பல்வேறு சட்டங்களில் இரு அவைகளில் நிறைவேற்றுவதற்கு துணை நின்ற இயக்கம் அதிமுக. நிர்பந்தத்தினால் ஆதரிப்பதாக தற்போது கூறுகிறார். இதே நிர்பந்தம் நாளைக்கு வந்தால் மாறிவிடுவார் எடப்பாடி பழனிசாமி. எங்களை பொறுத்தவரை பாஜகவிற்கு மாறான கூட்டணி இந்தியா கூட்டணிதான். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிதான் நாங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் சிறுபான்மை சமுதாயத்தினர் இந்த கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்க உள்ளோம்'' என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பாணி, மாவட்டத் தலைவர் முகமது ஜக்கரியா, நகர தலைவர் அன்வர் அலி, நகர செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, பொருளாளர் அப்துல் ரியாஸ், கவுரவ ஆலோசகர் மகபூப் உசேன் ஆகியோர்  பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.