Skip to main content

செல்ஃபி எடுத்தபோது குழந்தை ஆற்றில் விழுந்தது - தேடும் பணியில் தீயணைப்புதுறையினர்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
selfi

 

பெற்றொரின் செல்ஃபி மோகத்தினால் 4 வயது குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது.

 

 தமிழகமெங்கிலும் உள்ள ஆறுகளில் இப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.  ஆற்று வெள்ளத்தை மக்கள் வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரில்  வாங்கல் பாலத்தில் நின்றுகொண்டு பெற்றோர் செல்ஃபி எடுத்தபோது 4 வயது குழந்தை தவறி விழுந்தது.   இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையின் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்