Skip to main content

விருது பெற்ற உற்சாகம்!  சேவையில் பெண் எம்.எல்.ஏ. வேகம்! -ஸ்ரீவில்லிபுத்தூர் நெகிழ்ச்சி!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
mla

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாவுக்கு ‘தமிழகத்தின் சிறந்த  பெண் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற  விருதினை வழங்கி கவுரவித்தது திருவனந்தபுரம் ரோட்டரி கிளப்.  இதை அறிந்த உள்ளூர்வாசிகள்  ‘நம்ம ஊரு எம்.எல்.ஏ.வுக்கு மகளிர் தினத்தன்று கேரளாவில் விருது தந்திருக்கிறார்களே! எம்.எல்.ஏ. என்ற முறையில் தொகுதியை அப்படி ஒன்றும் சிறப்பாக கவனிக்கவில்லையே?’ என்று முணுமுணுத்தனர். 


விருது பெற்ற உற்சாகத்தினாலோ என்னவோ, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தொகுதி மக்களுக்காக நல்ல காரியம் ஒன்றை செய்திருக்கிறார்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு திடீரென்று 6 ½ வருடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தியது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி. இதுகுறித்து, சந்திரபிரபா எம்.எல்.ஏ.விடம் தொகுதி மக்கள் முறையிட்டனர். 6 ½ வருடங்களுக்கு போடப்பட்ட அரியர் சொத்து வரியை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவரும் தாமதிக்காமல் சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையாளரைச் சந்தித்து மக்களின் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாக ஆணையர் 6 ½ வருடங்களுக்கு போடப்பட்ட  சொத்துவரியை ரத்து செய்துவிட்டார். பிறகென்ன? ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.