Skip to main content

குடும்பத்துடன் தேர்தல் புறக்கணிப்பு - மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

தேனி மாவட்டத்தில் மொத்தம் இரண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். அக்கல்லூரிகள் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி மதுரை காமராஜர் உறுப்புக் கல்லூரியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2002-03 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இக்கல்லூரியில், தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் சுமார் 18,000-த்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகளுக்கு கல்வியை வழங்கியுள்ளது. இங்கு பயில வரும் மாணவர்கள் அனைவரும் மிகவும் பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ள மாணவர்கள். தேனியிலேயே பல்கலை கழக கல்லூரியாக இக்கல்லூரி செயல்படுவதால் கட்டணம் குறைவு என்பதன் அடிப்படையில் மிகவும் கஷ்டப்படக்கூடிய மாணவர்கள் இக்கல்லூரியை தேர்வு செய்கின்றனர்.

 

mku



சிலர் காலச்சூழ்நிலையின் காரணமாக கல்லூரியில் இணையும் வாய்ப்பு கிடைக்காவிடில் ஓராண்டு காலம் காத்திருந்து அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறும் பொழுது மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பயிலும் உள்ளன.இக்கல்லூரியில் வருடத்திற்கு மொத்தம் 400-500 மாணவர்கள் சேர்க்கைக்காக வருகின்றனர். இங்கு நான்கு இளநிலை பட்டப்படிப்புகள் மட்டுமே தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மொத்தம் 38 விரிவுரையாளர்கள், 19 அலுவலகப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.இச்சூழலில் தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்ட சபையில் கடந்த 01.06.2018-ல் பல்வேறு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற 41 உறுப்புக் கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.

 

mku



இவ்வரசாணையை நடைமுறைக்கு கொண்டுவருவதனால் அங்கு பணியாற்றக்கூடிய விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அங்கு பணியாற்றும் 57 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அதில் சிலர் முனைவர் பட்டம் பெற்று 14 வருடமாக பணிபாற்றியுள்ளனர். ஆகவே இவ்வரசாணையை எதிர்த்து " தமிழ்நாடு அரசு உறுப்புக்கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்(TNGCCGLA- சங்க பதிவு எண்.231/2018) சார்பில் பல்வேறு அமைதிப்போராட்டங்கள் மற்றும் மனுதாக்கல் தொடர்ந்து செய்யப்படுகின்றனர்", அவர்களின் பிரதான கோரிக்கையாக தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத அளவில் தங்கள் அனைவரையும் பணியில் அமர்த்தி எங்களின் வாழ்க்கை நிலையை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். TNGCCGLA- சங்கத்தலைவர் திரு.அ.கதலி நரசிங்க பெருமாள் அவர்கள் நம்மிடம் கூறுகையில்,"அரசாணை (நிலை) எண்.36 உயர்கல்வி (G1) துறை நாள் 28.02.2019 மூலம் 14 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 
 

mku



இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வரசாணையில் உறுப்புக் கல்லூரிகள் துவங்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களைவிட குறைத்து தற்போது ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வகுப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதை அறிய முடிகிறது.எனவே, எங்களின் சங்கமானது உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களையும், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களையும் பலமுறை நேரடியாக சென்று எங்களின் கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் பயனில்லை.

இச்சூழ்நிலையில் 01.03.2019 ஆம் தேதியன்று தமிழக அரசு மேற்படி 41 உறுப்புக் கல்லூரிகளில் முதல் கட்ட நடவடிக்கையாக கடந்த 1995-96 ஆம் கல்வியாண்டு முதல் 2010-11 கல்வியாண்டு வரை துவங்கப்பட்ட 14 உறுப்புக் கல்லூரிகளை அரசிணை மூலம் வெளியிட்டுள்ளது.
1)அன்னை தெரசா பல்கலைக் கழகம், கொடைக்கானல்.
2)மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,ஆண்டிபட்டி & கோட்டூர்.
3)பாரதியார் பல்கலைக்கழகம், கூடலூர் & வால்பாறை.
4)பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரம்பலூர் & ஒரத்தநாடு & லால்குடி & அறந்தாங்கி.
5)பெரியார் பல்கலைக் கழகம் , பொன்னகரம் & மேட்டூர்.
6)திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திருவெண்ணெய்நல்லூர் & தென்னாங்கூர்.
7)மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சாத்தான்குளம். போன்ற கல்லூரிகளுக்கும் இவ்வரசாணை பொருந்தும் என்கின்றனர்.  

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய கோரிக்கைகள்:
1) காலம் சென்ற தமிழக முதலமைச்சர் MGR அவர்கள் இதற்கு முன்னர் செயல்படுத்திய  10(A1)-ன் படி நிரந்தர பணிநியமனத்தை நடைமுறைப்படுத்தும் போது பல ஆண்டு காலம் தற்காலிகமாக பணியாற்றி வருகின்ற அரசு பணியாளர்களுக்கு பணி முன்னுரிமை என்ற நடைமுறையை பின்பற்றினார்.தற்போதுள்ள தமிழக அரசும் மேற்படி நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
2)ஆசிரியர்களுக்கு வரன்முறை ஊதியம் வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள மாத தொகுப்பூதியமான ரூ.43,500 தொகையை 12 மாதங்களுக்கும் வழங்க வேண்டும் , எங்களது பணி நியமனம் தொடர்பான கருத்துருவை முன் எடுத்து எங்களின் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வரை எங்களின் போராட்டங்கள் தொடரும். இச்சூழல் தொடர்ந்தால் தேர்தலை கட்டாயமாக குடும்பங்களுடன் புறக்கணிப்போம்",என்கின்றார்.



பா.விக்னேஷ்பெருமாள்

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.