Skip to main content

அசால்ட்டாக சுற்றித்திரியும் கரடி; அச்சத்தில் ஊர் மக்கள்

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
 Bear

தென்காசியில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்திற்கு அருகே குடியிருப்பு ஒன்றுக்குள் கரடி புகுந்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடையத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ள நிலையில் அவ்வப்போது ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வரும் நிலையில் கரடி ஒன்றின் வரவு ஊர் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

நேற்று இரவு கருத்தப்பிள்ளையூர் பகுதியில் சிகாமணி என்பவர் வீட்டின் முன்பு கரடி ஒன்று நின்றது. அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை தாழிட்டுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கடையம் பகுதி மக்கள் இதனால் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் விரைவாக கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Goats attacked by mysterious animal bites; Forest department investigation


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில் டி என் பாளையம் வனச்சரகமும் அடங்கும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவரது வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை வீட்டு முன்பு உள்ள காலி இடத்தில் கட்டி விட்டு தூங்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை சரவணன் வந்து பார்த்தபோது இரண்டு ஆடுகள் மர்ம விலங்கால் கடிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் அவரது வீட்டு முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனர்.

பின்னர் இது குறித்து நம்பியூர் போலீசாருக்கும், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடயம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு கடித்து இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூட்டம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.