Skip to main content

கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்; மாணவர்கள் இடைநீக்கம்! பேராசிரியரும் சஸ்பென்ட்!!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

jkl

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரிலுள்ள மந்தித்தோப்பு செல்லும் சாலையில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு கணிதத் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன்(45). இவர் நேற்று முன்தினம் கல்லூரியிலுள்ள தனது அறையில் இருந்தபோது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் பேராசிரியர் மயங்கிச் சரிந்திருக்கிறார். அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அவரை மீட்டுக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, என்னுடைய கணிதத் துறை மாணவர் ஒருவர் சக மாணவியைக் காதலித்தார். இதை நான் கண்டித்ததோடு அதனை இருவரது பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இதனால் ஆத்திரமான மாணவர், மற்றும் 3 மாணவர்கள் சேர்ந்து என் அறைக்குள் புகுந்து என்னைத் தாக்கினார்கள் என்று புகார் கூறியுள்ளார். இதன்பின் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், இந்த தாக்குதல் காரணமாக இரண்டு மாணவர்களை கல்லூரி முதல்வர் நிர்மலா சஸ்பெண்ட் செய்திருக்கிறார். தவிர கல்லூரி பேராசிரியரின் நடத்தை குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியவர் அதுகுறித்த அறிக்கையை நெல்லை மண்டல கல்லூரி கல்வி துணை இயக்குநருக்கு சமர்ப்பிக்க, அதனடிப்படையில் கல்லூரி பேராசிரியர் சங்கரனை இடைநீக்கம் செய்து கல்லூரிக் கல்வி துணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் மீது பாலியல் சீண்டல் குறித்த தகவலும் உள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என போலீஸ் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

 

jkl

 

இந்நிலையில் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். இதனிடையே கல்லூரி மாணவர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் பேராசிரியர் சிவசங்கரன் மீது 377வது பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். தாக்குதல் மற்றும் பாலியல் புகார் சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்டம் பரபரப்பாகியிருக்கிறது

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.